நானு ஊருக்கு போய் வந்த வொடனே, நம்ப
ஏரியால கீற அல்லாருக்கும் நம்ப மேல ஒரு
மரியாத வந்து, இன்னாங்கோ பாண்டி சார் ,டீ
குடிகீறிய இல்ல காபி தண்ணி சொல்ட்டா !
அப்டீன்னு ஒரு மேரி நம்பல மச்சிகினாங்கோ !
நம்பாளு நொட்ட இன்னாடான்னா ! கலரு
கண்ணாடி ,அப்பால வாசான வருமே ! அத்தே
தடவிக்கினு ஒரே குசால் தான் போ.அப்ப தான் நம்ப
ஏரியால மளீ கட ,அட அதாம்பா இந்த அல்லாமே
விக்கற கட , அதான் , அதுக்கு நா ஒரு கூள் ட்ரிங்கு
குடிக்கலான்னு, போனே, அங்க பாத்தா
ஒரு போர்ட்டு வச்சி கீது, அதுல போட்டு கீது ..
"கான மயிலாட
கடன் வந்து மேலாட
வாங்கியவன் கொண்டாட
நான் இங்கு திண்டாட
தயவு செய்து
கடன் கேட்காதிர்கள் "
அப்டீன்னு போட்டு இர்ந்துசி , அவன கூப்ட்டு, டேய் ,
கசமாலம் இன்னடா இதுல எழதி கீது அப்டீனு கேட்டேன் ,
அதுக்கு அவன், டவுசரு இன்ன பிரியல உனக்கு நீ தான்
உஸ்தாது கணக்கா ,ஊருக்கு அல்லாம் போய் வந்தியே !
இன்னா டவுட்டு சொல்லு அப்டீன்னா !
அதுக்கு நா டேய் இதுக்கு வரிக்கு வரி நீ எனக்கு அர்த்தம்
சொல்லு இல்லன்னா உன் நெஞ்சில கீற மஞ்சா சோத்த
எட்துடுவேன் அப்டீன்னு கொரலு உட்டேன் ,அதுக்கு
அவன் இரு நா சொல்லறேன், இன்னுட்டு கான மயிலாட ,
அப்டீனா காட்டுல மயில் டான்சு ஆடுது, அடுத்து கடன்
வந்து மேலாட - அப்டீன்னா , கடன்னு நம்ப மேல
டான்சு ஆட, அடுத்து வாங்கியவன் கொண்டாட உன்ன
மேரி ஆளுங்கோ , குசலா ! இருக்க சொல்ல,
நான் இங்கு திண்டாட - நா நாமத்த போட்டுக்க ,
தயவு செய்து கடன் கேட்காதிர்கள் " உன்ன கெஞ்சி
கேட்டு கீறேன், கடன் மட்டு சொல்லாதேபா !!
இத்தா மேட்டரு , இன்னு சொல்லி ஒரு வையா
முட்சாம்பா , எனுக்கு கோவமான கோவம்
வந்து அவன புட்சி டேய் சோமாறி ,
மயிலு காட்ல கீது அது டான்சு அடனா, உனுக்கு
இன்னா ? அப்பால ,உனுக்கு கடனு கீதுன்னா ,
அத்த நீ தாண்டா சோமாரி அடிக்கணும் அத்த
வுட்டுட்டு ,?? நீ நாமாத்தன்னா போட்டுக்கோ !
இல்ல காட்டி வேற எத்தனா போட்டுக்கோ ?
எனுக்கு இன்னடா ? ஓயுங்கு மரியாதையா ,இந்த
போர்ட எட்துடு , கடன் இல்லன்னா !
"நம்ப கடைல கடன் இல்ல" அப்டின்னு
எய்து இன்னு சொல்லி ரெண்டு போடு போட்டுட்டு
அப்பால தான் நா ஊட்டுக்கே வந்தேன் .
பின்ன இன்னாபா ! ஒரு நியாயம் வாணாம் !
நீயே சொல்லு ????????
கடன் கேட்காதிர்கள் - கேட்காதீர்கள் என வரவேண்டும் டவுசர்பாண்டி...
இதுக்குதான் மழைக்காவது ஸ்கூலான்ட ஒதுங்கனும்னு சொல்லுவாங்க...
வரட்டா...
வாழ்க வளமுடன்,
வேலன்.
எங்கப்பா நம்ப ஏரியா ,பக்கமே காநோம், காலீலையே, வண்டே, ஒரு வாய் காபி தண்ணி குட்சீட்டு போப்பா ! அதான் மருவாதி .அக்காங் !!!!!
//கடன் கேட்காதிர்கள் - கேட்காதீர்கள் //
ரெண்டுதுக்கு யீன்னா, நம்ப டவுசரு பாண்டி அகராதில படிப்பே ஏர்ல பா ,அப்பால அல்லாம் ஒன்னு தான் ,நம்பளுக்கு மேட்டரு மிக்கியம், அதாவர்ட்டா .
யேப்பா டவுசரு! அப்டி எய்தி வச்சதில என்னாத்த அநியாயத்த கண்டுகின!
ஒரு நல்ல கானாக் கணக்கா ஜோராதானக் கீது! அத அப்டியே வுட்ருப்பா, அக்காங்!!
நல்லா குயிக்கிறாய்ங்கப்பா வியக்கம்
மோகனு அண்ணாத்தே , நீயே !
சொல்லு இந்த அநியாயத்த,
இவங்கோ போர்டு போடுவாங்களாம் !
நம்பள்லாம் கடன் கிடன் ,
சொல்ல கூடாந்தாம்பா ! இன்னா
அநியாயம் பாத்தியா ?
ஐயோ ! எங்க ஜமாலு அண்த்தே
எப்பிடி கீறே அண்த்தே ?
நம்ப ஏரியால அல்லறோம் நல்லா
கீரங்களா ?அடிக்கடி வண்டு
போ அண்த்தே !
கான மயிலாட
கடன் வந்து மேலாட
வாங்கியவன் கொண்டாட
நான் இங்கு திண்டாட
தயவு செய்து
கடன் கேட்காதிர்கள் "
nalla kavithai
//nalla kavithai//
- sakthi சொன்னது.
அண்ணாத்தே ,,
மொத தபா நம்ப ஏரியாக்கு வந்ததுக்கு
டான்குசுபா , அடிக்கடி வாப்பா !!
innapa tavusaru un area pakkam vanthaavae vayithu valiyoda thaan poganum pola keethu pa... orea damasa keethu pa akkanggg..........
கருத்துரையிடுக