பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

இது ஒரு கற்பனை பேட்டி.

·

செய்திகள் ; நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு

அனைத்து கட்சிகளும் தீவிர ஆலோசனை.


இதை கேட்ட நம்ப டவுசர் பாண்டி,அவரோட

தோஸ்து நொட்ட சேகரை கூட்டிக் கொண்டு

அனைத்து கட்சி தலைவர்களையும் பேட்டி எடுக்க

புறப்பட்டு விட்டார் .

இனி முதலில் , கேப்டன் விஜயகாந்த்,


டவுசர் பாண்டி ; டே சேகரு நம்ப கேப்டன் கிட்ட

நா பேசர கண்டி நீ வாய தொரக்காதே , அப்பாலே

அவரு நம்ப மேல காண்டு ஆய்டுவாரு அக்காங் சொல்டேன். .

நொட்சேக; ஐய இன்ன கொழந்தன்னு நின்சியப்பா,

நா கம்முனு கீறேன்

கேப்டன். வீட்டுக்குள் வந்துவிட்டார்கள் . இனி ,

டவு,பாண்; வன்கம் தலைய்வரே , உன் கிட்ட

ஒரு சில கொஸ்டீனு கேக்கலாம்முன்னு

ஹி, ஹி .. ( பயத்துடன் )

கேப்; கேளு தம்பி ,

டவு,பாண்; நீங்க கூட்டணி வைப்பீங்களா ? மாட்டீங்களா ?

கேப்; அது தேர்தல் வரும்போது சொல்றேன் ,

டவு,பாண்; ஐயே அதான் வன்ச்சீ பா !

கேப்; இது தேர்தலே இல்லே ! எங்களை

கேட்காமல் தேதி அறிவித்து விட்டார்கள்,

ஆகவே ,இது செல்லாது என என் தொண்டர்களிடம் கூறுகிறேன்

டவு,பாண்; செரி , நீ அவுகள நம்பறியா இல்லையா ?

கேப்; யாரே, ?

டவு,பாண்; அதாம்பா ,இந்த தேர்தலு கமீசன தான் ,

கேப்; அது தான் இடைத் தேர்தலில் அவர்களின் சுய ரூபம் தெரிந்ததே,

டவு,பாண்; செரி , நீங்க இந்த தேர்தல்ல எத்தீனி

சீட்டு கெலீப்பீங்கோ , கரீக்ட்டா சொல்லு

கேப்; இது நம் தமிழர்களின் தன் மானம் காக்கும்

தேர்தல் ஆகவே ,( சற்று குனிந்து தன்

மனைவி பெரேமலதாவிடம் எவ்வளவு சொல்லலாம் ,)

(அவர்கள் , சொல்லு மொத்தம் சொல்லு ).

ஆகவே மொத்தம் உள்ள முப்பத்தி நாலு

தொகுதிகளும் எங்களுக்கு தான் இது ஒரு சரித்திர சாதனை.

டவு,பாண்; அப்போ வர்ட்டா, தலீவா !

கேப்; போய் வா .

நொட்ட ; எப்பா நா ஒரு கேள்வி கேக்கட்டா ?

டவு,பாண்; சொம்மாறு தேவல! ,

கேப்; - தம்பி நீ கேள் .

நொட்ட - மொத்தம் எத்தினி தொகுதீ

இன்னு கூட தெரியாம தான் நீ அர்சீலு பன்றீயப்பா?

டவு,பாண்; ஐயோ ! மாப்பு வெச்சாண்ட ஆப்பு .

( இருவரும் எஸ்கேப் )

அடுத்து ,நம்ப அம்மா, வீட்டுக்கு செல்கின்றனர் .

நொ,சே ; வாணாம்ப்பா . அப்பால நம்ப டவுசர கெய்டீடுவானுகோபா,

டவு,பாண்; மெர்சலா ஆவாதே, கண்ணு நா கீறேன்

டவு,பாண்; ; யம்மா ,உங்க கோட்டனி ல யாரு யாரு கீறாங்கோ!

அம் ; சசி ,இவர் என்ன சொல்லராரு ?

சசி ; யக்கா ,இது தமிழ் தான்,ஆனா கொஞ்சம் உன்னிப்பா கவனி.

அம் ; சரி சரி

டவ் ; யம்மா ,உங்க கோட்டனி ல யாரு யாரு கீறாங்கோ! ;

அம் ; சகோ வைகோ ,மற்றும் கம்யுனிஸ்ட் பிறகு

சகோ டாக்டர்க்கு தூது விட்டுள்ளேன் இது வெற்றி கூட்டணி.

டவ் ; உங்க கய்ல தா டமில் நாட்டோட மானமே கீது

அப்பெடின்னு அல்லாரும் சொல்லி கீறாங்கோ அது மெய்யாலுமா?

அம் ; இதுல என்ன சந்தேகம்? என் கூட்டணி தான் வெல்லும்

அடுத்த பிரதமர் யார் என்பதை நான் தான் தீர்மானிக்க போகிறேன் .

( உடனே சசி , யக்கா , எனக்கு தான் அது )

டவ் ; சேரி ,எத்தினி சீட்டு கேலீப்பீங்கோ!

அம் ; இன்னடி சொல்றான்.

சசி ; நாம எத்தனை தொகுதி வெற்றி பெறுவோம் அப்படின்னு கேக்கிறான்.

அம் ; இதுல என்ன சந்தேகம் 40 -ம் நமதே.

டவ் ; யம்மா இந்த இளங்கே பிரச்சன பத்தி?

அம் : நான் உண்ணாவிரதம் இருந்து பாதி தீர்ந்து விட்டது.

டவ் பா : மீதி எப்போ சொல்லு?

அம் : நான் இந்த தேர்தலில் பிரதமர் ஆகி இலங்கை

பிரச்னையை தீர்த்துவேடுவேன்.

டவ் பா ; மன்சீகம்மா, இது என்கு தெர்யாம பூடுச்சி.

அம் ; பர்வாலப்பா, இப்போ இன்னா அய் பூட்ச்சின்னு

நீ மெர்சலு அவரே, ஐயே !.

சசி ; அக்கா, நீ என்ன சொல்றே,

அம் ; இவன் கிட்ட பேசனா, ஒரே கொழ்பமா கீது,

இவ்னே உட்னே காலீ பண்ணு.

( சசி, ஒரு முறை முறைக்க நம்ப டவ் பா, மற்றும் நொட்ட எஸ்கேப் )

( அறிவாலயத்தில் ஆஜர் ஆகின்றனர் )


டவ் பா, நொட் ; வன்கம் தலீவரே!

கலைஞர்; வா, தம்பி வா ,உன் தினவெடுத்த தோள்களுக்கு ,

தோள், கொடுக்கவே யாம் உள்ளோம்

நொட் ; இன்னாப்பா சொல்றாரு,

டவ் பா ; கண்டுக்காதே.

டவ் பா ; தலீவரே, நீ உடம்பு செரிஇல்லாத மன்சாலு

அதா கண்டி ஒரே ஒரு கேள்வி தான் பா,

கலை ; தம்பி, என் மனதிற்கு இன்னும் வயதாகவில்லை,

அதனால் நீ எதுவும் கேள்.

டவ் பா ; டான்குசுபா, செரி, இந்த தபா எலீசனுல நீ இன்னா

அறிக்கே குடுக்க போரெ? அத்தே மின்ன சொல்லு?

கலை ; என் தேர்தல் அறிக்கையை கேட்கின்றாயா?

டவ் பா ; அக்காங்க்பா ,

கலை ; தேர்தல் நேரத்தில் என் அறிக்கை வரும் பார்.

போன தேர்தல் நாயகனே, என் தேர்தல் அறிக்கை தான்

என்பதால் தான் நீ இப்படி கேட்கின்றாய் என எனக்கு புரிகிறது ,

டவ் பா ; அப்பால, யார் கூடோ தான் தோஸ்தா ஆவ போறே ?

கலை ; எல்லோரும் என் நண்பர்கள் தான்.

டவ் பா ; இப்பிடி சொன்னா இன்னாபா!

( ஆற்காடு ,ஸ்டாலின் ,மற்றும் துரைமுருகன் ஆகியோர் நம்மிடம்

தயவு செய்து கிளம்பு, என அன்பு உத்திரவு போட எஸ்கேப் )


அடுத்து நொட்ட சேகரு டவுசர் பாண்டி கிட்ட மாப்பு

அடுத்ததா எங்க போவலானு சொல்லு பா,

டவ் பா , மச்சி, நம்ப முக்கீமா ஒர்தர பாக்க லாம்ப்பா ,

நொட்; யாரு மாப்பு,

டவ் பா ; நம்போ டாக்டருதாம்பா !
(தைலாவரம் தோட்டத்தில் )

டாக் : வணக்கம், தோழா, உன் போன்ற உழைக்கும் நண்பர்களை
நம்பி த்தான் இந்த நாடே இருக்கிறது.

டவ் பா ; வன்கம் தலீவரே, அப்பாலே, உங்க கிட்ட ஒரு கேள்வி.

டாக் ; கேள் தம்பி.

டவ் பா ; இப்போ நீங்கோ எந்த கூட்டணில தாம்பா கீற?

டாக் ; ( மணி ,நாம் இப்போ யாருடன் இருக்கிறோம், என யோசித்து சொல் )

மணி ; அய்யா, நாம் இருவருடனும் பேசி வருகிறோம் .

டவ் பா ; ஐயே, கரீக்டா சொல்பா!

டாக் ; இந்த தேர்தல் முடியட்டும், இதில் யார் ஆட்சி

அம்மைக்கின் றார்களோ? அவர்களூடன் தான் கூட்டணி
என அறிவித்து விடுகிறேன் . சரி தானே மணி.

மணி ; ஆம் அய்யா !

டவ் பா ; ஒன்னிமே புர்லேபா !

டாக் ; இதில் புரியாததற்கு என்ன இருக்கிறது ? இருவருடனும்
கூட்டணி என அறிவித்து விட்டு அதில் யார் அதிக தொகுதி
வெற்றி பெறுகிறார்களோ, அந்த கூட்டணி தான் நம் கூட்டணி
என அதிகார பூர்வமாக அறிவித்து விடுகிறேன்.

( இதை கேட்ட நம் நொட்ட சேகரு மற்றும் டவுசர்
பாண்டி இருவரும் மயங்கி விழுகின்றனர்)

சொம்மா தமாசா ஒரு ஓட்ட போடு தலிவா,
நா இன்னா வேரெ ஒட்டா கேகீரே.
ஊன் கர்த்து இன்னான்னு சொல்லு அக்காங்,
நம்பல மேரி ஆளுக்குளுக்கு அதாம்பா மிக்கீயம்.



9 கருத்துகள்:

RAMYA said...

நான்தான்பா மொதல்லே சரியா!!!

RAMYA said...

பேட்டி ரொம்ப டாப்பா இருக்கு தம்பி.

கேள்விகளும் அருமை, அதற்கு தலைவர்களின்
பதில்களும் அருமையோ அருமை.

RAMYA said...

நல்ல சிந்தனைத் திறன் அதிகமா இருக்கு உங்களுக்கு.

இந்த திறனை சரியான முறையில் பயன் படுத்துங்கள்
உங்கள் வாழ்க்கைக்கு இது ஒரு ஏணிப்படியாக அமையும்.

RAMYA said...

பழைய சென்னை தமிழ் கொஞ்சுது
உங்களின் வார்த்தை ஜாலங்களில்

ஏதேனும் பத்திரிகையில் வேலை செய்கின்றீர்களா??

RAMYA said...

பதில்கள் ரொம்ப அருமையா அமைஞ்சு இருக்கு.

யாரு கண்டா யாரேனும் பத்திரிகை காரங்க பார்த்தா
உங்களை தூக்கி கொண்டு போய் கேள்வி பதில் செக்சன்லே போட்டுட போறாங்க.

என்னை அழைத்ததிற்கு ரொம்ப நன்றி தம்பி !!

வாழ்த்துக்கள்!!

டவுசர் பாண்டி said...

யக்கா, உங்கோ ,
வர்கையாலே நம்ம,
தோஸ் துங்கோ அல்லாரூம்,
ரொம்ப குசாலா அயிட்டானுக்கோ,
ரொம்ப டாங்க்ஸ்,

டவுசர் பாண்டி said...

//வாழ்த்துக்கள்//

உங்களே, மேரி மன்சாளுங்கோ !
தான் என்ன மேரி உஸ்தாது
பசங்களுக்கு,
சப்போட்டு ,
அக்காங்,

டவுசர் பாண்டி said...

RAMYA சொன்னது,

//ஏதேனும் பத்திரிகையில்
வேலை செய்கின்றீர்களா??//

இன்னா மேரி வார்த்தைக்கா ,
என்ன மேரி ஆளுக்கள ,
எந்த பத்தீரிககாரன் கூப்டுவான்
சொல்லு ஐயே !

நம்க்கு தான் இந்த பொட்டி கீதே !
இதலேயே நம்ப

டகால்டி வெலெய்லாம்
காட்லாம்.மருதபா,

டாங்க்சு.

டவுசர் பாண்டி said...

அப்பால அட்த தபா,
வேரெ மேட்ரூல சொம்மா
தில்லாலங்கடி கண்கா வரேன்.
வன்கம்பா!

கருத்துரையிடுக

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .

நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh