நாங்களும் கவிதை எழுதுவோம்ல - டவுசர் பாண்டி

போன தபா பதிவு இன்னாவோ ரொம்ப சின்னது தான் , ஆனா
கமண்ட்டு மட்டும் சூடா கீது பா !! யாரு அந்த உண்மை விளம்பி
இன்னு தெரில , செரி நாம தெரிஞ்சிக்கவும் வாணாம் !!
நானும் இன்னாவோ கோவத்துல , திட்டி உட்டுட்டேன் பா !!
அப்பால தான் , ரோசன பண்ணி பாத்தேன் ,
இது ஒரு பொது ஊடகம் , அவரு கருத்து நானு எழத வாணாம்
இன்னு சொல்றது , அதுக்கு போய் நாம கோச்சிக்கலாமா ? என்
கோவம் இன்னான்னா இதுக்கு தானே ஒட்டு போட்டி கீது அதுல
எத்தினி தபா ஒனும்னாலும் குத்து ,
( ஐய்யா , அதுக்காவது அடிக்கடி வரணும் இல்லை , ஒரே பொட்டில
குத்த முடியாது ) செரி , டவுசருக்கு இன்னா , தமிழே தெரியாதா ?
இன்னு கேக்கறீங்களா ?
நா கூட இஸ்கூலுக்கு எல்லாம் மின்ன போய்க்கீனு தாம்பா இருந்தேன் !!
அப்ப கொஞ்சம் தமிழ் தெரியும் , ( இப்ப நானு இன்னாவோ , உகாண்டா
பாஷைல பேசறா மேரி ) இன்னா இருந்தாலும் ,
நம்ப ஏரியா தமிழு தாம்பா !! புடிக்கும் !
எனுக்கு தெரிஞ்ச தமிழுல நானு எழ்தன ஒரு கவிதைய உங்களுக்கு
பதிவிடுறேம்பா !! ( யார ஏமாத்துற இது கவிதையா ? )

( ஐ நமக்கு கவிதை கூட வருமா ? )
இது நால்லா கீதா இல்லையான்னு !! இன்னு நீங்க தான்
சொல்லணும் !!


அந்த நாட்கள்

கடந்த கால நினைவுப்
பக்கத்தை புரட்டும் போது,
நிறைய பக்கங்கள்
பழுதடைந்துள்ளன - ஆனால்
அழிந்து விடவில்லை ,
அழியாத பக்கங்களின்
தலைப்பினில் வாசம்
வீசிக்கொண்டிருக்கும் - நம்
நினைவுகளின் எச்சம்
நினைவுச் செல்களை
புரட்டிப் பார்க்கையில்
உஷ்ணமாய் - சுடும்
நிகழ்கால நிஜங்கள் ,
ஆறாத ரணங்கள்
எத்தனை வலித்தாலும்
அதிலும் ஒரு சுகம்
இருக்கத்தான் செய்கிறது ,
மன்னித்து விடு புத்தகத்தை
அழிப்பதற்காக, - அதுவும் ?
களவு போகாமல்
இருக்கத்தான் ,
என்ன செய்ய ?
நினைவுப் பக்கத்தை
தோண்டிப் பார்க்கும்
ரத்த நாளங்களை,
வெட்டி எறிந்து

விடவா முடியும் ?







இதை நானு போன வருஷம் எழதிக் கீச்செம்பா !! புட்ச்சா
உங்க கருத்த ரவ சொல்லுங்க தல !!
புடிக்கலன்னாலும் சொல்லுங்க தல !!




50 கருத்துகள்:

  1. நினைவுச் செல்களை
    புரட்டிப் பார்க்கையில்
    உஷ்ணமாய் - சுடும்
    நிகழ்கால நிஜங்கள் ,


    .........அருமையான வரிகள்.

    பதிலளிநீக்கு
  2. உங்க வருகைக்கி அப்பால , கருத்துக்கு டாங்க்ஸ் சகோதரி , (கொஞ்சம் வெட்டிப் பேச்சு - நல்ல தலைப்பு , ஆனா எல்லாமே நல்ல மேட்டரா தான் போடுறீங்க ! )

    பதிலளிநீக்கு
  3. அட, நம்ம தலைக்கு கவித கூட வருதே! நீ கலக்கு தலீவா!

    பதிலளிநீக்கு
  4. ஆ..ஆ..வலிக்குது, ஜூபரு தலிவா, டக்கராகீது கவிதை, உன்னும் நிறைய கவிதை சொல்லு தல.

    பதிலளிநீக்கு
  5. இன்னால தல... இன்னா ஆச்சு...கவுஜைல்லாம் எய்த ஆரம்பிச்சிட்டீங்க.....
    அண்ணாத்த எதுக்கும் நல்ல டாக்குடரா பாருங்க அண்ணாத்த...நீங்கோ நார்மலாத்தான் இருக்கீங்களோன்னு டவுட்டா கீதுபா...

    பதிலளிநீக்கு
  6. டவுசரே ஒன்னுமே பிரில பா. அது தமிலா இன்னாமோ எழ்தரே மிட்டும் புரீது.அக்காங்!!!

    பதிலளிநீக்கு
  7. நம்ம பேட்ட பாசைல கவித சொல்லாத்துக்கு உன் பேச்சு கா போ,,:)

    பதிலளிநீக்கு
  8. //அட, நம்ம தலைக்கு கவித கூட வருதே!// -Mohan கூறியது

    இன்னாமோ தெர்ஞ்சத எழ்தனேன் தல , கருத்துக்கு டாங்க்ஸ் வாஜாரே !!

    பதிலளிநீக்கு
  9. அட பாகாயம்! நம்மூரா தோஸ்து உன் பேச்சு பழம் இப்ப இன்னா சர்யா..:))

    பதிலளிநீக்கு
  10. //ஆ..ஆ..வலிக்குது, ஜூபரு தலிவா, டக்கராகீது கவிதை,//- saivakothuparotta கூறியது.

    அய்யா , நம்ப எழ்தனத கவித இன்னு ஒத்துக்கீரீன்களா ? யப்பா !! டான்குசு தல !!

    பதிலளிநீக்கு
  11. //நார்மலாத்தான் இருக்கீங்களோன்னு டவுட்டா கீதுபா//-நாஞ்சில் பிரதாப் கூறியது,


    இதுல உங்களுக்கு இன்னா டவுட்டு .............. சொக்கா கீச்சிக்காத கொர தான் போ !! தல !!

    பதிலளிநீக்கு
  12. //டவுசரே ஒன்னுமே பிரில பா. அது தமிலா இன்னாமோ எழ்தரே மிட்டும் புரீது.அக்காங்!!//-ஜெய்லானி கூறியது.


    நானு சொல்றது , யாருக்கு பிரியுதோ இல்லியோ !! பச்ச ரோசா உனுக்கு கூடவா பிரியல ?

    பதிலளிநீக்கு
  13. //நம்ம பேட்ட பாசைல கவித சொல்லாத்துக்கு உன் பேச்சு கா போ,//-ஷங்கர்.. கூறியது.

    அறியாத புள்ளை , தெரியாத சேஞ்சிப் புட்டேன் தப்பா நென்சிக்காத தலீவா !! சோக்கு கவித போட்டுட்டா போச்சி !! வருகை + கருத்து ரெண்டுக்கும் டாங்க்ஸ் பா !!

    பதிலளிநீக்கு
  14. //அட பாகாயம்! நம்மூரா தோஸ்து உன் பேச்சு பழம் இப்ப இன்னா சர்யா//-ஷங்கர்.. கூறியது.

    நானு இனிமேட்டு தான் அங்கப் போவப் போறேன் பா !! ஹையா நீங்க அங்க தான் கீரீங்களா ? ரொம்ப நல்லதா போச்சி , டாங்க்ஸ் பா - பையம் உட்டதுக்கு.

    பதிலளிநீக்கு
  15. கடந்த கால நினைவுப்
    பக்கத்தை புரட்டும் போது,
    நிறைய பக்கங்கள்
    பழுதடைந்துள்ளன - ஆனால்
    அழிந்து விடவில்லை ,//

    ஆம் காலங்கள் மாறும். உண்மைவிளம்பியும் மாறுவார்...ஆனால் கடந்த காலம் அழியாது...சரியா....? வாழ்க வளமுடன், வேலன்.

    பதிலளிநீக்கு
  16. //கடந்த காலம் அழியாது...
    சரியா....? //


    நாம உசுரோட கீர வெரிக்கும், அழியாது தல , கருத்துக்கு டான்சுங்கோ !!

    பதிலளிநீக்கு
  17. ///நானு சொல்றது , யாருக்கு பிரியுதோ இல்லியோ !! பச்ச ரோசா உனுக்கு கூடவா பிரியல ?///
    கழுத ச்சே கவிதன்னு இன்னாமோ எழ்தினியே அத்த சொன்னே தல.

    பதிலளிநீக்கு
  18. டவுசர் கிழியிது பாண்டி :))
    சோக்காகீது கவுஜ :))

    பதிலளிநீக்கு
  19. //கழுத ச்சே //கவிதன்னு இன்னாமோ எழ்தினியே அத்த சொன்னே தல.//-ஜெய்லானி,


    ஹையான் அது கவித , தான் ஒத்துக்க இல்லா காட்டி நானு அழுவேன்
    அக்காங் !! ங் ங்....

    பதிலளிநீக்கு
  20. //டவுசர் கிழியிது பாண்டி//-SUBBU கூறியது.


    எங்க சுப்பு வாஜார், வந்தாச்சி
    வந்தாச்சி ... இன்னா தல அடிக்கடி அப்பீட்டு உடறியே நாயமா ? தல !!

    பதிலளிநீக்கு
  21. //ஆறாத ரணங்கள்
    எத்தனை வலித்தாலும்
    அதிலும் ஒரு சுகம்
    இருக்கத்தான் செய்கிறது//

    அருமை... சூப்பர் தலைவா! கலக்குங்க..

    பதிலளிநீக்கு
  22. போ.. நைனா...

    நீ நம்ம தமில்ல கவுஜ எய்திருப்பன்னு வந்தா... தெலுங்குல எழ்திகீற.. ஒன்னியும் புர்லப்பா..

    பதிலளிநீக்கு
  23. ஆறாத ரணங்கள்
    எத்தனை வலித்தாலும்
    அதிலும் ஒரு சுகம்
    இருக்கத்தான் செய்கிறது ,

    நிஜம் தான் ..சூப்பரா கீது

    பதிலளிநீக்கு
  24. அண்ணாத்தே கவிதை நல்லாகீதுப்பா.

    பதிலளிநீக்கு
  25. மொதா தடவா இந்தாண்ட கவித வாசம் வருதுப்பா

    கலக்குறப்பூ

    பதிலளிநீக்கு
  26. //அருமை... சூப்பர் தலைவா! கலக்குங்க.//-சூர்யா ௧ண்ணன் கூறியது.

    வாங்க தலீவா !! உங்க கருத்துக்கு ரொம்பவே டாங்க்ஸ் தல !!

    பதிலளிநீக்கு
  27. //நீ நம்ம தமில்ல கவுஜ எய்திருப்பன்னு வந்தா... தெலுங்குல எழ்திகீற.. ஒன்னியும் புர்லப்பா.//- ஹாலிவுட் பாலா கூறியது,

    ஹா ஹா ஹா !! பாலாண்ணா !!! ........... ( அழகிய தீயே, பட ஸ்டைலுல கூப்புட்டு பாத்தேன் ) டாங்க்ஸ் ணா !!

    பதிலளிநீக்கு
  28. //நிஜம் தான் ..சூப்பரா கீது//-padma கூறியது.

    ரொம்ப டாங்க்ஸ் , சகோதரி .... நானு ரசித்து எழ்தியது இது !!

    பதிலளிநீக்கு
  29. //அண்ணாத்தே கவிதை நல்லாகீதுப்பா.//- Mrs.Menagasathia கூறியது.

    வாங்க சகோதரி , அப்போ எனுக்கு கூட ,எதுனா எழ்த வரும் இன்னு சொல்லுங்க , உங்க வருகைக்கி ரொம்பவே
    டாங்க்ஸ் !!

    பதிலளிநீக்கு
  30. //மொதா தடவா இந்தாண்ட கவித வாசம் வருதுப்பா//-அபுஅஃப்ஸர் கூறியது.

    ஐயோ !! தல இஸடாப், இஸடாப் தெரியாத எழ்திட்டேன் மன்னாப்பு குட்துடு தல !!

    பதிலளிநீக்கு
  31. தல கவிதையெல்லாம் எழுதி கலக்கறீங்க...

    பதிலளிநீக்கு
  32. //தல கவிதையெல்லாம் எழுதி கலக்கறீங்க.//- கோபிநாத் கூறியது.


    உங்க வருகைக்கி அப்பால கருத்துக்கு ரொம்பவே டாங்க்ஸ் தல !!

    பதிலளிநீக்கு
  33. தோ பார்ரா.. டவுசருக்குள்ளே ஒரு கவிஞரு... டவுசர கீச்ட்டபா...

    பதிலளிநீக்கு
  34. கவித கவித பாண்டி...

    வா வாத்தியாரே வுட்டான்ட
    நீ வார காட்டியும் விடமாட்டேன்
    ஜான் பேட்டை ஜக்கு
    நீ சைதா பேட்டை கொக்கு..

    யாரு அந்த உண்மை விளம்பி ( ஆய் எங்க ஏரியா உள்ள வராதே!)

    கவலையை உடு நைனா
    நம்ப பத்தி இன்ன தெரியும் அவுருக்கு
    கொக்கு குளுருல இருக்கு பாவபட்டு
    கொக்குக்கு டவுசர் கொடுத்த பரம்பரைப்பா
    உன்னுது.. வரலாறு தெரியுமா அவருக்கு.

    பதிலளிநீக்கு
  35. //தோ பார்ரா.. டவுசருக்குள்ளே ஒரு கவிஞரு... டவுசர கீச்ட்டபா//-அண்ணாமலையான் கூறியது.

    கீயல்லியே !! கீயலியே !!! டவுசர் கீயலியே !! பாருங்க பாருங்க , நானும் கவிஞ்சரு தான் , அப்பிடி பார்ம் ஆயிக்கீனு வரோம்ல !! நம்புக்க தல !! தல !! உங்க வருகைக்கி+கருத்துக்கு , டாங்க்ஸ் பா !!

    பதிலளிநீக்கு
  36. //கொக்கு குளுருல இருக்கு பாவபட்டு
    கொக்குக்கு டவுசர் கொடுத்த பரம்பரைப்பா உன்னுது.//-புதுவை சிவா,

    இது எப்போ !! சொல்லவே இல்ல , அதானா ஒரு டவுசர காணோம் இன்னு நானு பாட்டுக்கு , கூவிக்கீனு கெடக்குறேன் , தல ,

    சூப்பரா சொன்னீங்க தல !! வரலாறு தெரீமா !! இன்னு , ரொம்ப டாங்க்ஸ் பா !! இப்ப தான் நாலு ஓர உட்டா மேரி கீது தல !!

    பதிலளிநீக்கு
  37. அட தழிழ் கவிதை எல்லாம் எழுத தெரியுமா? உங்க எழுத்து நடையை படிக்கவும் புரியவும் எனக்கு நேரமாகுது. நான் பழகாத பாஷையா இருக்கு. கஷ்டபட்டுதான் படிக்கவேண்டியிருக்கு. ஆனாலும் பலவும் பயனுள்ளதாகதான் இருக்கு தொடரட்டும் உங்கள் பதிவு. மனப்பூர்வமான வாழ்துக்கள்.

    பதிலளிநீக்கு
  38. கவிதையில் அத்தனைவும் உண்மை.

    பதிலளிநீக்கு
  39. இன்னா தலை சும்மா ஜிகுரா பூந்து விளையாடுறியே. அப்பால நெஞ்சுகுள்ள குசு குசுன்னு உன் கவிதை பட்சதும், பிளாஸ்பேக் சும்மா 1000 வாட்ஸ் பல்பு கணக்கா எரிய ஆரம்பிச்சுருச்சு. சும்மா சொல்லக் கூடாது தலை, நீ மெய்யாலுமே வஸ்த்தாதுதான். வரட்டா. நன்றி நைனா.

    பதிலளிநீக்கு
  40. //அட தழிழ் கவிதை எல்லாம் எழுத தெரியுமா? உங்க எழுத்து நடையை படிக்கவும் புரியவும் எனக்கு நேரமாகுது. நான் பழகாத பாஷையா இருக்கு.//-KUPEARAKUMARAN JOTHIDA ARAICHE MAYAM கூறியது.


    ஏதோ, கொஞ்சம் கொஞ்சம் தெரியும் தல !! உங்க மொதல் வருகைக்கி ரொம்பவே டாங்க்ஸ் வாஜாரே !! தொடர்ந்து பட்சாக்கா பிரியும் , அடிக்கடி வாங்க !! அன்போட ( இல்ல கோவத்தோட ) உங்க கருத்த ரவ சொல்லுங்க . டாங்க்ஸ் .

    பதிலளிநீக்கு
  41. //கவிதையில் அத்தனைவும் உண்மை//-malar கூறியது.

    உண்மை தான் சகோதரி , உன்னும் ஒன்னு தெரியுமா ? " நினைவுகளை அழிக்க எந்த எரேசரும் , இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை " - இது எனக்கு மிகவும் பிடித்த வரிகள் ,

    சொன்னது பட்டுக்கோட்டை பிரபாகர், எனக்கு அவரின் எழுத்துக்கள் மிகவும் பிடிக்கும் . உங்க கருத்துக்கு ரொம்ப டாங்க்ஸ் .

    பதிலளிநீக்கு
  42. //katanthakalam aththaniyum alinthu vidavillai. super inaivukal. kavithai thotarattum//-Madurai Saravanan கூறியது.

    ரொம்ப டாங்க்ஸ் தலீவா !! நம்ப ஏரியாவுக்கு வந்து கருத்து சொன்னதுக்கு டாங்க்ஸ் தல ,

    பதிலளிநீக்கு
  43. //கவித!
    கவித!!
    அருமை தல//-கருவாச்சி கூறியது.

    இன்னா தான் நெனனச்சிக்கீனு கீரே, ஆளையே காணோம் , டானாகார் கிட்ட கம்பிளைன்ட்டு குடுக்கவே போயிட்டேன் பா !! இப்பவாது வந்தியே , டாங்க்ஸ் தல !!

    பதிலளிநீக்கு
  44. //பிளாஸ்பேக் சும்மா 1000 வாட்ஸ் பல்பு கணக்கா எரிய ஆரம்பிச்சுருச்சு//-பித்தனின் வாக்கு ,

    அப்போ !! உங்களுக்கு பிளாஷ் பேக்
    கீது ? உங்க கருத்துக்கு டாங்க்ஸ் தல !!

    பதிலளிநீக்கு
  45. கடந்த கால நினைவுகள் பற்றி கவிதை எழுதி நிகழ்காலத்தில் நின்று விட்டீர்கள்!

    பதிலளிநீக்கு
  46. //கடந்த கால நினைவுகள் பற்றி கவிதை எழுதி நிகழ்காலத்தில் நின்று விட்டீர்கள்!//-சுதாகரன் கூறியது.

    உங்க அன்பான கருத்துக்கு ரொம்பவே டாங்க்ஸ் , தலைவா !!

    பதிலளிநீக்கு
  47. "kakithaoodam" இப்போ "காகிதஓடம்" நன்றி அண்ணாச்சி

    பதிலளிநீக்கு

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .